காட்டு யானை தாக்கி ஆதிவாசி வாலிபர் பலி
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கீழ்நாடு காலனி பகுதியில் ஆதிவாசிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச்சேர்ந்த தமிழோசை மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் விறகு பொறுக்குவதற்காக காட்டுக்குள் சென்றனர்.அப்போது அங்கு சில காட்டு யானைகள் அவர்களை வழி மறித்தன.
யானைகளைப் பார்த்ததும் இருவரும் தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை விடாமல் துரத்திய ஒருயானை, இருவரையும் தாக்கியது. இதில் பிரகாஷ் எப்படியோ தப்பியோடி விட்டார்.
ஆனால் தமிழோசை மட்டும் யானையிடம் வகையாக சிக்கிக் காண்டார். அவரை யானை தன் துதிக்கையால்தாறுமாறாக அங்கும் இங்கும் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றது. இதில் உடல் சின்னாபின்னமாக சிதறிபரிதாபமாக பலியானார் தமிழோசை.
உடல் சிதறி பலியான தமிழோசையின் உடலை வனக்காவலர்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
-->