விவசாயிகளுக்கு இலவச உணவு: 26,074 மையங்கள் தயார்
சென்னை:
தமிழகத்தில் வறுமையால் வாடும் விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு அளிப்பதற்காக 26,074 சத்துணவுமையங்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
வரும் பொங்கல் தினத்திலிருந்து (நாளை மறுநாள்) விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் 26,074 கிராமப்புற சத்துணவு மையங்கள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்களுடைய குடும்பத்தினரை நேரடியாகஅழைத்துக் கொண்டு போய், ஊராட்சி அல்லது பேரூராட்சி அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்து கொண்டுகூப்பன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தக் கூப்பன்களைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றுதான் கடைசி நாளாகும்.
பொங்கல் தினத்தன்று இலவச மதிய உணவுடன் சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்படும். மதிய உணவைப்பெறுவதற்காக விவசாயிகள் தாங்களே தட்டு அல்லது பாத்திரத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications