சாத்தான்குளததில் அதிமுகவுக்கு ஆதரவாக த.மா.கா.கா. பிரசாரம்
நாகர்கோவில்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட புதிதாக உருவாகியுள்ளதமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
அதிமுக பின் பலத்துடன் காங்கிரஸ் கட்சியை உடைத்து இந்த அதிருப்தி காங்கிரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தஅதிருப்தி கோஷ்யிடில் இருந்த மணி நாடார் இறந்ததால் தான் இப்போது இடைத் தேர்தலே நடக்கிறது.
மணி நாடாரின் மனைவி ஜானகியை அதிமுக தனது கட்சியில் இழுத்துப் போட்டுவிட்டது. ஜானகியை வைததுப்பிரச்சாரம் செய்தால் அனுதாப ஓட்டுக்கள் அதிமுகவுக்குக் கிடைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டுள்ளார்.
இந் நிலையில் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிக் கொண்டு கட்சியை உடைத்தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளத.மா.கா.கா. தலைவர் டாக்டர் குமாரதாஸ் சாத்தான்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தன் கட்சியில் உள்ள 3காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய குமாரதாஸ், எங்களது கட்சியின் நான்கு எம்.எல்.ஏக்கள் மற்றும்500க்கும் மேற்பட்ட கட்சியினர் அதிமுகவின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம்.
எங்கள் தலைவர் மூப்பனார் காட்டிய வழியில்தான் நாங்கள் செல்கிறோம். அதிமுகவே சரியான நண்பன் என்றுதலைவர் மூப்பனார் அடையாளம் காட்டியுள்ளார். எனவேதான் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறோம்என்றார் டாக்டர் குமாரதாஸ்.
-->












Click it and Unblock the Notifications