ரோம் எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ: பா.ஜ.க. குறித்து இளங்கோவன்
சென்னை:
காவிரி டெல்டாப் பகுதியில் வறட்சியால் பட்டினிச் சாவே நடக்கவில்லை என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்வெங்கையா நாயுடு கூறியுள்ளது, ரோமாபுரி தீப்பிடித்து எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் கதை போலஉள்ளது என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா பகுதியில் தலைவிரித்தாடும் வறட்சி,பஞ்சம் காரணமாக 12 ஏழைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இவை பட்டினிச் சாவுகளே என்று எந்தக் கட்சியையும் சாராத 9 பேர் கொண்ட குழுவே ஆய்வு செய்துஉறுதிப்படுத்திவிட்டது.
பட்டினிச் சாவுகள் நிகழாவண்ணம் தடுப்பதே மக்கள் ஆட்சியின் அழகு என்று சென்னை உயர்நீதிமன்றமும் தமிழகஅரசைக் கண்டித்துள்ளது. இவையெல்லாம் நாடறிந்த உண்மைகள்.
நிலைமை இப்படி இருக்க மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சியின் தலைவரான வெங்கைய்யா நாயுடு, பட்டினிச்சாவே நடக்கவில்லை என்று ஜெயலலிதாவின் கேடுகெட்ட ஆட்சிக்கு வக்காலத்து வாங்கிப் பேசியுள்ளது ஒருபக்கம் வேடிக்கையாக இருக்கிறது, மறுபுறம் வேதனை தருகிறது.
டெல்லியில் இருந்து கொண்டு, உண்மை நிலவரம் அறியாமல் வெங்கையா நாயுடு பேசியிருப்பது ரோமாபுரி பற்றிஎரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல உள்ளது என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
"அரசியல் மாற்றம் வருகிறது"- வாசன்:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் ஜி.கே. வாசன் கூறினார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அதிமுக அரசு மக்கள் விரோத அரசாக மாறி விட்டது. விவசாயிகளுக்காகவும், நெசவாளர்களுக்காகவும், பிறதொழிலாளர்களுக்காகவும் இந்த அரசு ஒரு நன்மையும் செய்யவில்லை.
இப்படிப்பட்ட அரசு மக்கள் விரோத அரசாக மட்டுமே இருக்க முடியும். சாத்தான்குளம் இடைத் தேர்தலில் இதைப்பெரிதாக வைத்தே பிரசாரம் செய்யப்படும்.
சாத்தான்குளம் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரி, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுநடத்தப்பட்டு வருகிறது என்றார் வாசன்.
-->