சாத்தான்குளம் இடைத் தேர்தல்: நாளை வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம்
சாத்தான்குளம்:
முக்கியக் கட்சிகள் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் சாத்தான்குளம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
சாத்தான்குளம் தொகுதி தமாகா எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.எஸ். மணிநாடார் கடந்த நவம்பர் 9ம் தேதிதிடீரென்று மரணமடைந்ததைத் தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால்இன்னும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
ஆளும் அதிமுகவினர் எப்படியும் இந்தத் தேர்தலிலும் அராஜகத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் சாத்தான்குளம்இடைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று திமுக அறிவித்து விட்டது. அக்கட்சியைப் பின்பற்றி மதிமுகவும்இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவை பா.ஜ.க. இன்றுதான் அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 7ம்தேதி வரை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள பிப்ரவரி 10ம் தேதிதான் இறுதி நாளாகும். இதையடுத்து 26ம் தேதிஇடைத் தேர்தல் நடைபெறும்.
மார்ச் 1ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
-->