விவசாயிகளுக்கு ரூ.5,000 இழப்பீடு தர பா.ஜ.க. கோரிக்கை
சென்னை:
வறட்சியால் வாடும் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 இழப்பீடு தொகை வழங்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 இழப்பீடு கொடுக்க வேண்டும். வறட்சிநிவாரண நிதியாக ரூ.109 கோடியை ஏற்கனவே மத்திய அரசு விடுவித்துள்ளது.
மேலும், மத்தியக் குழுவும் வந்து வறட்சி பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது.
பட்டினியால் வாடும் விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.1,000 கொடுக்க வேண்டும். இலவச அரிசித்திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
புது வீராணம் திட்டத்தால் பலன் இருக்காது. எனவே இந்தத் திட்டம் தேவையற்றது. வீண் செலவுக்கே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கணேசன்.
-->












Click it and Unblock the Notifications