கண் பார்வை இழந்தவர்கள் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேற மறுப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு பார்வை பாதிக்கப்பட்ட 45நோயாளிகள் மதுரை அரசு பொது மருத்துவமனையிலிருந்து வெளியேற மறுத்து வருகிறார்கள்.

கண் பார்வை பாதிக்கப்பட்ட 45 பேரில் 18 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. மற்ற 27 பேருக்கும்,விரைவில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அவர்களும் பார்வையை இழந்து விடும் அபாயத்தில்உள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவர்களில் குணமடைந்து விட்ட 18 பேரையும் டிஸ்சார்ஜ் செய்தும் கூட அவர்கள் வெளியேற மறுத்துவருகிறார்கள்.

தங்களுக்கு முழுப் பார்வை கிடைக்கும் வரை இங்கேயேதான் இருப்போம் என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

அதேபோல், மற்ற 27 பேருக்கும் உடனடியாக "விட்டிரக்டமி" என்ற அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.ஆனால் அந்த வசதி அரசு மருத்துவமனையில் இல்லாத காரணத்தால், அவர்களை அரவிந்த் கண்மருத்துவமனைக்குச் செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அங்கே போகடியாது என்று 27 பேரும் மறுத்து வருகிறார்கள். இதனால் அவர்களது பார்வை முற்றிலும்பறிபோகும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அவர்களை சமாதானப் படுத்தி விரைவில் அவர்களை அரவிந்த் மருத்துவமனைக்கும் முயற்சியில் அரசுமருத்துவமனை டாக்டர்கள் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+