For Daily Alerts
Just In
போதை: இந்தியருக்கு இந்தோனேஷியாவில் தூக்கு
ஜகார்தா:
போதை மருந்து கடத்திய இந்தியரை தூக்கில் போட இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது.
அயோத்தியா பிரசாத் செளபே என்ற அந்த நபர் 1994ம் ஆண்டு இந்தியாவில் இருந்து 12.3 ஹெராயின் போதை மருந்துடன்ஜகார்தாவுக்குள் ஊடுருவினார். இவருக்கு இந்தோனேஷிய நீதிமனறம் தூக்கு தண்டனை விதித்தது.
தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு அதிபர் மேகாவதி சுகர்னோபுத்ரியிடம் அயோத்தியா பிரசாத் கருணை மனுகொடுத்தார். ஆனால், அதை அதிபர் தள்ளுபடி செய்துவிட்டார்.
இதனால் இவகுக்கு தூக்கு உறுதியாகிவிட்டது. எப்போது இவர் தூக்கில் போடப்படுவார் என்று தெரியவில்லை. இவருடன்சேர்ந்து மேலும் 5 இந்தோனேஷிய போதைக் கும்பலுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-->
Comments
Story first published: Friday, February 7, 2003, 5:30 [IST]