இட்லி சாப்பிட்ட 21 குழந்தைகள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே இட்லி சாப்பிட்ட 21 குழந்தைகள் உள்ளிட்ட முப்பது பேருக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கபிஸ்தலம் அருகே உள்ளது தேவனகுடி கிராமம். இங்குள்ள சிறிய ஹோட்டலில் காலையில் இட்லி வாங்கிச்சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தனர். பலரும் மயங்கி விழுந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்கள் சாப்பிட்ட இட்லியில் விஷத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.கெட்டுப்போன இட்லிமாவு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர்கள்தெரிவித்தனர்.

மயங்கி விழுந்த 30பேரி 21 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அனைவரும்குணமடைந்துவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+