தேசிய மனித உரிமை ஆணைய தலைவரானார் ஆனந்த்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிஅப்துல் கலாம் அவரை இப் பதவியில் நியமித்துள்ளார்.
இதுவரை தலைவாரக இருந்த வர்மா கடந்த மாதம் ஓய்வு பெற்றார். 66 வயதான ஆனந்த் கடந்த 2001ம் ஆண்டு நவம்பரில் தான் தலைமைநீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
மனித உரிமை ஆணையத் தலைவராக அவர் 3 வருடங்கள் 10 மாதம் பதவியில் இருப்பார். ஆணையத்தின் உறுப்பினராக உச்சநீதிமன்றத்தின் இன்னொரு முன்னாள் நீதிபதியான தாமசும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் விஷயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட ஆனந்த் கடந்த 1996ம் ஆண்டிலேயே சர்வதேச மனித உரிமைச் சங்கத்தின்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications