பவானி அணை விவகாரம்: திருவனந்தபுரத்தில் தமிழக அமைச்சர்கள் குழு
சென்னை:
பவானி அணை பிரச்சனை தொடர்பாக தமிழக, கேரள அமைச்சர்கள் இன்று பிற்பகல் பேச்சு நடத்த உள்ளனர்.இதற்காக சென்னையிலிருந்து தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் இன்று காலை சிறப்பு விமானம் மூலம்திருவனந்தபுரத்திற்குக் கிளம்பிச் சென்றனர்.
பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணைக் கட்ட கேரளம் திட்டமிட்டுள்ளது. இதற்குதமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலமும்பாழ்பட்டுப் போகும் என்பதால் இத் திட்டத்தை தமிழகம் எதிர்த்தது. மேலும் சுமார் 40 லட்சம் மக்கள் இதனால்குடிநீர் கிடைக்காமல் திண்டாடுவார்கள் என்பதால் அவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று கேரள முதல்வர் ஆண்டனிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதினார்.
இப் பிரச்சனை குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தலாம் என்று கேரள முதல்வர் யோசனைதெரிவித்தார்.
இதையடுத்து கேரள அமைச்சர்களுடன் பேச்சு நடத்த தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நிதிஅமைச்சர் பொன்னையன், சட்ட அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித் துறைசெயலாளர் நாராயணன், பொதுப்பணித் துறை செயலாளர் குற்றாலிங்கம், காவிரி தொழில்நுட்பக் குழுவின்தலைவர் மோகனகிருஷ்ணன், மின்வாரியத் தலைவர் ஞானதேசிகன், தலைமைப் பொறியாளர்கள் முத்துபொம்முமற்றும் அரிராம் ஆகியோர் இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் கிளம்பிச்சென்றனர்.
சாத்தான்குளத்தில் தீவிர இடைத் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள பன்னீர் அங்கிருந்து நேரடியாகத்திருவனந்தபுரத்திற்குச் சென்று விட்டார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கேரள அமைச்சர் ஜேக்கப் தலைமையிலான உயர் மட்டக்குழுவினருடன் தமிழகக் குழு பேச்சு நடத்தும்.
இதற்கிடையே இன்று கேரள சட்டசபையில் பேசிய ஜேக்கப், இன்றைய கூட்டத்தின் போது பவானி அணைவிவகாரம் தவிர பரம்பிக்குளம்- ஆழியாறு, முல்லை- பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகளும்விவாதிக்கப்படும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications