விவசாயிகளுக்கு உதவி கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க. போராட்டம்
சென்னை:
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 நிதியுதவி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ம.கவினர் இன்று போராட்டம் நடத்தினர்.
காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5,000 நிதியுதவி, புஞ்சை நிலங்களை வைத்திருப்பவர்களுக்குஏக்கருக்கு ரூ.3,000 நிதி, வறட்சியால் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் மாதம் 30 கிலோ அரிசி,விவசாயிகள் வாங்கிய கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், நில வரி, வீட்டு வரி ஆகியவற்றை ரத்துசெய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
நாங்கள் கோரியுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். மேலும்பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்குமே 30 கிலோ அரிசியை வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கவில்லை என்றால் அதிமுகவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும்தான் அரிசி வழங்கப்படுவதாகஅர்த்தம் என்றார் மணி.
இதேபோல் திருச்சியிலும் தாலுகா அலுவலகத்தின் முன் பா.ம.கவினர் போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்குஇழப்பீடு வழங்க வேண்டும், அவர்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அப்போதுஅவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பா.ம.கவினர் போராட்டம் நடத்தினர்.
-->












Click it and Unblock the Notifications