For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆற்காடு வீராசாமி மீதான ஜெ.யின் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கின்விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சியின்போது தாக்கப்பட்ட முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான டி.வி.வெங்கட்ராமனை மருத்துவமனையில் சென்று ஜெயலலிதா பார்த்து உடல் நலம் விசாரித்தார். இதை விமர்சனம்செய்து வீராசாமி அறிக்கை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து வீராசாமி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். சென்னை எழும்பூர்மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி வீராசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அம்மனுவில்,

என் வக்கீல் மூலமாக கேள்விகளுக்குப் பதில் கூற அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தேன். ஆனால் எழும்பூர்நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

மருத்துவக் காரணங்களுக்காக நான் விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் புறக்கணித்து விட்டது. நீதிமன்றத்தில்நான் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் கூறியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது.

எனது தரப்பு வக்கீல் மூலம் சட்டப் பிரிவு 313ன் கீழ் விசாரணைக்கு முறையிட எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்.அதுவரை இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், வீராசாமி மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்தார். மேலும் இதுகுறித்து வரும் 21ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X