தமிழகத்தில் தயாரான ரயில் பெட்டிகளை குறை சொல்வதா?- ஆந்திர முதல்வருக்கு கண்டனம்
சென்னை:
சென்னை ஐ.சி.எப். (ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை) தொழிற்சாலையில் தயாரித்து,ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்ட ரயில் பெட்டிகள் தரக் குறைவாக உள்ளதாக ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு பேசியுள்ளதற்கு ஐ.சி.எப். ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்காக, சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்துரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசோதித்த நாயுடு, பெட்டிகளின் தரம்குறைவாக இருப்பதாகவும், அதை சென்னைக்கே திருப்பி அனுப்பப் போவதாகவும் கூறியிருந்தார்.
இதனால் ஐ.சி.எப். தொழிலாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள்கூறுகையில்,
இரவு, பகலாக நாங்கள் இங்கு பணியாற்றுகிறோம். நாங்கள் மட்டுமல்லாது, அதிகாரிகளும்எங்களுடன் இருந்து பெட்டிகள் தயாரிப்பதை மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக, பல வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்துவருகிறோம். இந்தியாவில் சிறந்த ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை என்ற பெயரையும்ஐ.சி.எப். பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐ.சி.எப். குறித்து நாயுடு தரக் குறைவாகப் பேசியுள்ளார். குறைந்த முதலீட்டில், அதிகதரத்தை எதிர்பார்ப்பது நியாயமல்ல. மேலும் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில்களுடன்ஹைதராபாத் ரயில்களை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.
சிறந்த பெட்டிகளைத் தயார் செய்து கொடுத்தும் எங்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டார்நாயுடு. அவருக்கு ஐ.சி.எப். தொழிலாளர்களாகிய நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
-->












Click it and Unblock the Notifications