கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு மீனாட்சி கோவிலில் பூஜை
மதுரை:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி மதுரைமீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் உலகெங்கிலும் உள்ளஇந்தியர்கள் விரும்புகின்றனர்.
இதற்காகப் பலரும் பலவிதமான வேண்டுதல்களையும் நடத்தி வருகின்றனர். கோவில்களில்வழிபாடு, சர்ச்சுகளில் பிரார்த்தனை, மசூதிகளில் தொழுகை என இதன் பட்டியல் நீள்கிறது.
அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நேற்று நடந்த இந்த வழிபாட்டில் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுகோப்பையை வெல்ல வேண்டும் என்று வேண்டப்பட்டது.
கூட்டுப் பிரார்த்தனை, விநாயகர் பூஜை, விஜயலட்சுமி பூஜை எனப் பலவிதமான பூஜைகள்நடத்தப்பட்டன.
இதுதவிர தேவாரம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவையும் இசைக்கப்பட்டன.நூற்றுக்கணக்கான மாணவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுஇந்திய அணியின் வெற்றிக்காக மனமுருகி வழிபட்டனர்.
நம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மீனாட்சி அம்மன் அருள் புரிவாளா?
இந்நிலையில் தற்போதைய உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இன்று இந்தியஅணி மோதவுள்ளது.
-->