சென்னையில் மார்ச் முதல் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை
திருச்சி:
சென்னையில் மார்ச் மாத இறுதிக்குள் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன் செல்போன் சேவையைத்தொடங்கும் என்று தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சரான திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
திருச்சியில் இது தொடர்பாக இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் தற்போது 83 நகரங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை அளிக்கப்பட்டுள்ளது.விரைவில் மற்ற நகரங்களுக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படும்.
சென்னையில் மார்ச் மாத இறுதிக்குள்ளாகவே பி.எஸ்.என்.எல். தன் சேவையைத் தொடங்கும்.
வரும் 2003-04 நிதியாண்டில் இந்தச் சேவை தமிழகத்தின் அனைத்து தாலுகாதலைமையகங்களுக்கும் கூட விரிவுபடுத்தப்பட உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் தொலைபேசிக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன் பின்னர் கட்டணம் குறைக்கப்படுமா என்பது குறித்துஅறிவிக்கப்படும் என்றார் திருநாவுக்கரசர்.
தொலைபேசிக் கட்டண உயர்வு குறித்து மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில்,இக்கட்டண உயர்வை வாபஸ் பெறக் கோரி சென்னையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களேபோராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனியார்கள் நடத்தி வரும் கூரியர் எனப்படும் விரைவு தபால் சேவைநிறுவனங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்என்றும் இன்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
-->