ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கி 302 ராணுவ வீரர்கள் பலி
டெஹ்ரான்:
ஈரானில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில்இருந்த 302 வீரர்களும் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஈரானின் ஸாகேதான் நகரிலிருந்து கெர்மானுக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு இந்திய நேரப்படி சுமார் 7.30 மணிக்கு அந்த விமானத்துடனானதொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. கெர்மான் நகரை அடைவதற்கு முன்பே அங்குள்ள ஒருமலைப் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி விட்டது.
ரஷ்ய தயாரிப்பான அனோடோவ் ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் பயணம் செய்தஅனைவருமே ராணுவ வீரர்கள்தான். இதிலிருந்த 18 விமான ஊழியர்கள் உள்ளிட்ட 302வீரர்களுமே இவ்விபத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரானின் பல பகுதிகளில்பனி மழை பெய்து கொண்டிருப்பதே இவ்விபத்திற்குக் காரணம் என்று தெரிகிறது.
இவ்விமானத்தைத் தீவிரவாதிகள் தாக்கி இருப்பார்களோ என்ற சந்தேகமும் நிலவுகிறது. ஆனாலும்உண்மையான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
-->












Click it and Unblock the Notifications