திண்டுக்கல் அருகே இட்லி சாப்பிட்ட 40 பேர் மயக்கம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சாலையோர ஹோட்டலில் பல்லி விழுந்த சாம்பாருடன் இட்லி சாப்பிட்ட 5பெண்கள் உள்பட 40 பேர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு சாலையோர ஹோட்டலில் இன்றுகாலை சிலர் இட்லி சாப்பிட்டுள்ளனர்.
அவ்வாறு இட்லி சாப்பிட்டவர்களில் ஐந்து பெண்கள் உள்பட 40 பேர் திடீரென்று அடுத்தடுத்துவாந்தி எடுத்து, மயங்கிச் சாய்ந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இட்லியுடன் தொட்டுக் கொள்வதற்காக ஊற்றப்படும் சாம்பாரில் பல்லி விழுந்ததால்தான் அதைச்சாப்பிட்டவர்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
சிகிச்சை பெற்று வரும் 40 பேருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள்கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 12ம் தேதிதான் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே தேவனகுடி என்ற கிராமத்தில் உள்ளசிறிய ஹோட்டலில் இட்லி சாப்பிட்ட 21 குழந்தைகள் உள்பட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-->