செங்கல்வராயன் விவகாரம்: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டேனா?- ராமதாஸ் பாய்ச்சல்
சென்னை:
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரத்தில் நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாக வந்தசெய்திகளால் மன வேதனை அடைந்துள்ளேன் என்று பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
செங்கல்வராயன் அறக்கட்டளையை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதிபதி பதவியேற்கவந்தபோது, பாமக தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏவான காடுவெட்டி குரு உள்ளிட்ட பலர் அவர்மீது தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். மணியும், குருவும்தலைமறைவாக இருந்து பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ராமதாசுக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்துநீதிமன்றத்தில் ஆஜரான ராமதாஸ் அங்கு இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டதாக செய்திகள்வெளியாகின.
ஆனால் இந்தச் செய்திகளை ராமதாஸ் மறுத்துள்ளார். இன்று சென்னையில் அவர் இது தொடர்பாகநிருபர்களிடம் கூறுகையில்,
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாகவெளியான செய்திகள் அனைத்தும் தவறு.
நீதிமன்றத்தில் நான் மன்னிப்பு கேட்கவே இல்லை. என்னுடைய வழக்கறிஞர் மாசிலாமணி மூலம்நான் எழுதிக் கொடுத்த பிரமாணப் பத்திரத்திலும் கூட நான் மன்னிப்பு கேட்டது போல் எந்தவார்த்தையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
என்னுடைய வழக்கறிஞர் கூட தன்னுடைய வாதத்தின்போது நான் மன்னிப்பு கேட்டதாகஎப்போதும் கூறவே இல்லை.
ஆனால் நான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிவிட்டன. அவைஎன்னை மிகவும் மன வேதனையில் ஆழ்த்தியுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பின் நகல் என் கைக்கு வருவதற்குக் கால தாமதம் ஏற்பட்டதால்தான் நான் இவ்வளவுநாளும் இதைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்தேன். தற்போது நான் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லைஎன்ற ஆதாரத்துடன் தீர்ப்பின் நகல் வந்துள்ளது. அதனால்தான் இன்று இதை நான் தெரிவிக்கிறேன்என்றார் ராமதாஸ்.
-->












Click it and Unblock the Notifications