சாத்தான்குளம்: மறு வாக்குப் பதிவு கோரிக்கை நிராகரிப்பு- நாளை வாக்கு எண்ணிக்கை

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாகக் கூறப்படும் 10 வாக்குச் சாவடிகளில்மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியதை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.

சாத்தான்குளம் தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த இடைத் தேர்தலின்போது 10 வாக்குச்சாவடிகளில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர்.

கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்திருந்த அதிமுகவினரைப் புகைப்படம் எடுத்த பத்திரிக்கைபுகைப்பட நிருபர்கள் மீது அவர்கள் செருப்பு மற்றும் கற்களை வீசி எறிந்து விரட்டினர்.

இது தொடர்பாக காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவன் தேர்தல் கமிஷனிடம் புகார்தெரிவித்திருந்தார். குறிப்பிட்ட 10 வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும்என்றும் கோரியிருந்தார்.

ஆனால் மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது.

நாளை வாக்கு எண்ணிக்கை:

இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு சாத்தான்குளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம், காங்கிரஸ் வேட்பாளரும் வழக்கறிஞருமான மகேந்திரன்உள்ளிட்ட 25 பேர் இங்கு போட்டியிட்டனர்.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன்மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மொத்தம் 10மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். 50 அதிகாரிகள் வாக்குகளை எண்ணுவார்கள்.18 சுற்றுக்களாக இந்த வாக்குகள் எண்ணப்படும்.

மின் வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காலை 11 மணிக்கே இத்தொகுதிஎம்.எல்.ஏ. யாரென்பது தெரிந்து விடும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+