For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை: திமுக மனு மீது உச்ச நீதிமன்றம் அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சென்னை தனி நீதிமன்றத்தில் நடந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையை வேக வேகமாக நடத்தி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க முயற்சிகள்நடப்பதாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை விதித்துள்ளது.

இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த மிகப் பெரிய பின்னடைவாகும்.

டான்சி வழக்கில் விசாரணையை முடித்துவிட்ட உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. இதில் என்னமாதிரியான தீர்ப்பு வருமோ என்ற கவலையில் ஜெயலலிதா உள்ளார். இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில்அவருக்கு எதிரான நிலையை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது.

தனது வருமானத்தையும் மீறி ஜெயலலிதா ரூ. 66 கோடி சொத்து சேர்த்த வழக்கு விசாரணை சென்னை தனிநீதிமன்றத்தில் நீதிபதி ராஜமாணிக்கம் முன் மிக வேகமாக நடந்து வருகிறது. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் ஆஜராகி சாட்டி சொல்லி வருகின்றனர். கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாமே பெரும்பாலும்தெரியாது என்பது தான் இவர்களின் பதிலாக உள்ளது.

அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த முன்னாள் போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடுநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்ககு எதிராக சாட்சியம் அளித்தார். இதில் திமுக ஆட்சியில் சேர்க்கப்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் பலரும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு பல்டிஅடித்துவிட்டனர்.

ஆனால், நல்லம்ம நாயுடு மட்டும் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக சாட்சி சொன்னார். இதனால்தனது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திலேயே தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வந்த வழக்கறிரும் கூட மாற்றப்பட்டுவிட்டார்.தமிழக அரசுக்கு ஆதரவாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட வேண்டிய இவர்ஜெயலலிதா, சசிகலாவுக்கே ஆதரவாக நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் வழக்கு விசாரணையும் வரலாறு காணத வேகத்தில் நடக்கிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா தனதுஅதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை அழிப்பதோடு, வழக்கறிஞரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்இந்த வழக்கு விசாரணைக்கு உடனே தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கையே வேறு மாநிலத்துக்குமாற்ற வேண்டும் என்று கோரி திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.

அதில், ஜெயலலிதாவே ஆட்சியில் இருப்பதால் தமிழகத்தில் இந்த வழக்கு விசாரணையில் நீதி கிடைகாக்காதோஎன்ற அச்சம் உருவாகியுள்ளது. வழக்கின் வேகமும், சாட்சிகளின் பல்டியும், அரசு வழக்கறிஞரின் செயல்பாடும்தான் இந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்.இப்போது நடந்து வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அன்பழகனின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அந்தியார்ஜூனா பேசுகையில், ஜெயலலிதாவே ஆட்சியில்உள்ள மாநிலத்தில் அவர் மீதே உள்ள வழக்கு விசாரிக்கப்பட்டால் நீதி கிடைக்காது. விசாரணை நடத்தியஅதிகாரிகளை அதிமுகவினர் மிரட்டுவதும், சாட்சிகளை மாற்றிப் பேச வைப்பதும் நடந்து வருகிறது.

அரசு வழக்கறிஞரும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இதனால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி அகர்வால் ஆகியோர் சென்னை தனி நீதிமன்றத்தில்நடக்கும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, மத்திய அரசு, மாநில காவல்துறை டி.ஜி.பி. ராஜகோபாலன் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாதியிலேயே நின்ற விசாரணை:

இதையடுத்து சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சொத்து குவிப்பு வழக்கின்விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 7ம் தேதிக்கு தனிநீதிமன்ற நீதிபதிராஜமாணிக்கம் ஒத்திவைத்தார்.

இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பொறுத்துஇவ்விசாரணையைத் தொடர்வதா, இல்லையா என்பது குறித்து தனி நீதிமன்றம் முடிவு செய்யும்.

கருணாநிதி வரவேற்பு:

இதற்கிடையே சொத்துக் குவிப்பு வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதைதிமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தனக்கு எதிரான வழக்கில் அவரே ஒரு அரசுத் தரப்பு வழக்கறிஞரை நியமித்து வழக்கை விரைவாகமுடிக்க ஜெயலலிதா முயன்றார். திமுக ஆட்சிக் காலத்தில் உடல் நலத்தைக் காரணம் காட்டிஇவ்வழக்கைத் தாமதமாக நடத்தச் செய்த ஜெயலலிதா தற்போது அதை வேக வேகமாக முடிக்கமுயன்று வருகிறார்.

ஆனால், நல்ல வேளையாக இவ்வழக்கில் அநீதி ஏற்படவிருந்ததை உச்ச நீதிமன்றம் தடுத்துவிட்டது.

இது தற்காலிகத் தடைதான். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்துஅடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார் கருணாநிதி.

படு வேகத்தில் நடந்த விசாரணை:

முன்னதாக கடந்த ஒரு மாதமாக இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில்மிகவும் வேகமாக நடந்தது.

மொத்தம் 259 பேர் சாட்சியம் அளித்தனர். கடைசி அரசுத் தரப்பு சாட்சியான போலீஸ் அதிகாரிநல்லம்மநாயுடு கடந்த இரண்டு வாரங்களாக சாட்சியம் அளித்து வந்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில்சாட்சியம் அளித்தனர்.

நேற்று ஜெயலலிதாவின் வழக்கறிஞரும், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும்சாட்சியம் அளித்தனர்.

இந் நிலையில் நேற்றே வக்கீல்களின் வாதங்களும் தொடங்கின. ஜெயலலிதா, சசிகலா மற்றும்இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜோதி வாதாடுகையில்,

ஜெயலலிதா 1991ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து 1996 ஏப்ரல் 30ம் தேதி வரைசென்னையிலும் மற்ற இடங்களிலும் சொத்துக்கள் சேர்த்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

அந்த மற்ற இடங்கள் எவை என்று குறிப்பிடப்படவில்லை. மற்ற இடங்கள் என்றால் ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தையேதான் குறிக்கும்.

அதேபோல் சம்பந்தப்பட்ட காலத்தில் 31ஏ போயஸ் தோட்ட கட்டடத்தைத் தவிர வேறு எந்தசொத்தையும் ஜெயலலிதா வாங்கவில்லை.

குற்றச்சாட்டில் ஜெயலலிதாவுடன் சசிகலா வசித்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியஅரசியல் சாசனச் சட்டத்தின்படி ஒருவருடைய அடிப்படை உரிமையையே பறிக்கும் செயலாகும்.ஒரு நபர் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிப்பதற்கு உரிமை உள்ளது. ஒரே இடத்தில்வசித்ததால் அங்கு சதிக்கான விதை தூவப்பட்டது என்று கூறிவிட முடியாது.

இந்த வழக்கே கற்பனையாகவே தொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்இருட்டு அறையில் குருட்டு மனிதன் கறுப்புப் பூனைத் தேடுவது போல் உள்ளது என்றார் ஜோதி.

வக்கீல்களின் விவாதங்கள் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான்இவ்வழக்கின் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X