வைகோவுக்கு வாஜ்பாய் கடிதம்: வீடியோ ஆதாரங்களை பார்த்த மதிமுகவினர்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளரான வைகோவுக்கு பிரதமர் வாஜ்பாய் நலம் விசாரித்து கடிதம் எழுதியுள்ளார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்வைகோ. பல மாதங்களாக சிறை வாசம் மேற்கொண்டு வரும் வைகோவை பல்வேறு கட்சித்தலைவர்களும் பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
மத்திய அரசு தரப்பில் ஆரம்பத்தில் யாரும் எந்த ஆதரவும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.இதனால் வைகோ அதிருப்தியுடன் இருப்பாதாக செய்திகள் வெளியான பிறகு பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் சிறைக்குவந்து வைகோவைச் சந்தித்தனர்.
இந்நிலையில் வைகோவின் உடல் நலம் குறித்து விசாரித்து வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில், "உங்கள் உடல் நலம் குறித்து அறிய விரும்புகிறேன். விரைவில் நீங்கள் விடுதலையாகவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் வாஜ்பாய்.
வைகோ கைது செய்யப்பட்டு எட்டு மாதங்கள் முடியவுள்ள நிலையில் தற்போதுதான் அவருக்குமுதல் முறையாக வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகோவுக்கு காட்டப்பட்ட வீடியோ ஆதாரம்
இந் நிலையில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினருக்கும் எதிராக காவல் துறையினர்தாக்கல் செய்துள்ள வீடியோ ஆதாரங்கள் இன்று அவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அதே போல ஆடியோகேசட்டுகளும் போட்டுக் காட்டப்பட்டன.
வைகோ மற்றும் 8 பேருக்கும் பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் இன்று இந்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் காட்டப்பட்டன.இதற்காக அனைவரும் சிறைச் சாலைகளில் இருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.
வைகோ உள்ளிட்ட ஒன்பது மதிமுகவினரும் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி நீதிமன்றத்தில் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-->