சாத்தான்குளம்: அதிமுக வெற்றியை எதிர்த்து காங். வழக்கு
திருநெல்வேலி:
சாத்தான்குளத்தில் அதிமுக வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக அத்தொகுதியில்போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளரான மகேந்திரன் அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை விட 17,492 வாக்குகள் அதிகம் பெற்றுநீலமேகவர்ணம் எம்.எல்.ஏவாகியுள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் மகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் தொகுதியில் பொதுவாக 75,000 வாக்குகள்தான் பதிவாகும். இடைத் தேர்தல்என்பதால் கூடுதலாக 5,000 ஓட்டுக்கள் வேண்டுமானால் விழலாம்.
ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இதிலிருந்தே20,000க்கும் அதிகமான கள்ள ஓட்டுக்கள் விழுந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இங்கு நியாயமான தேர்தல் நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தடுத்திருக்க முடியாது.இதனால் எங்களுக்கு இது ஒரு தோல்வியே அல்ல.
தேர்தல் முடிவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர்வேன் என்றார் வழக்கறிஞருமாகிய மகேந்திரன்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்தகட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் நன்றிதெரிவித்துள்ளார்.
-->