சாக்கடையில் வீசப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகள்: கோவையில் கொடூரம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் பிறந்து 2 நாட்களே ஆன இரட்டை ஆண் குழந்தைகள் சாக்கடையில் வீசப்பட்டுஇறந்து கிடந்தன.
கோயம்புத்தூர் மாநகரின் முக்கியப் பகுதியான செல்வபுரம் பகுதியில் இரண்டு ஆண் பிஞ்சுக்குழந்தைகள் சாக்கடையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை இரட்டைக் குழந்தைகள் என்றும்தெரிய வந்துள்ளது.
பிறந்து இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் அந்தக் குழந்தைகள் இரண்டும் சாக்கடையில் இறந்தநிலையில் கிடந்தது காண்போரை நெகிழச் செய்தது.
தகாத உறவின் காரணமாக இந்தக் குழந்தைகள் பிறந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாகவேஅவை சாக்கடையில் வீசப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
பெண் சிசுக்களைக் கொன்று குப்பையிலும், சாக்கடையிலும் போடுவது வழக்கமாக உள்ள இந்தக்காலத்தில் இப்போது ஆண் குழந்தைகளும் இதற்குத் தப்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications