வீரப்பன் விவகாரம்: அதிரடிப்படையிடம் கிராம மக்கள் உறுதி
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தால் அதைஅதிரடிப்படையினரிடம் நிச்சயம் தெரிவிப்போம் என்று சேலம் அருகே உள்ள 2 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கூறியுள்ளனர்.
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட பின்னர் வீரப்பனைத்தேடும் வேட்டையை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரப்படுத்தினர்.
இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிரடிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே கிராம மக்களின் ஆதரவையும் அதிரடிப்படையினர் நாடியுள்ளனர். வீரப்பன்நடமாடும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் அவர்கள்வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அதன்படி சேலம் அருகே உள்ள நீதிபுரம் மற்றும் லக்கம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்களைஅதிரடிப்படையினர் சந்தித்தனர். அப்போது வீரப்பன் நடமாட்டம் குறித்து தங்களுக்குத் துப்புசொல்ல வேண்டும் என்று அந்த மக்களிடம் அதிரடிப்படையினர் கேட்டுக் கொண்டனர்.
வீரப்பன் தலைக்கு ரூ.5.5 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதையும் அப்போது மக்களிடம்அதிரடிப்படை போலீசார் அடிக்கடி எடுத்துக் கூறினர்.
வீரப்பனைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களின் பெயர் குறித்த விவரங்கள் ரகசியமாகப்பாதுகாக்கப்படும் என்றும் கிராம மக்களிடம் அவர்கள் கூறினர்.
வீரப்பன் நடமாட்டம் குறித்த தகவல் தங்களுக்குத் தெரிய வந்தால் அவற்றை உங்களிடம் நிச்சயம்தெரிவிப்போம் என்று இரு கிராம மக்களும் அப்போது அதிரடிப்படையினரிடம் தெரிவித்தனர்.
தமிழக அதிரடிப்படை ஐ.ஜியான டி.கே. ராஜேந்திரனும் அப்போது அதிரடிப்படையினருடன்இருந்தார்.
-->