நீதிபதியின் எச்சரிக்கை அரசுக்கு அவமானம்: ப.சிதம்பரம்
கோவை:
தமிழகத்தில் பொருளாதார நிதி நெருக்கடியைப் பிரகடனப்படுத்த பரிந்துரை செய்யப் போவதாகஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கூறியுள்ளது தமிழக அரசுக்கு மிகப் பெரியஅவமானமாகும் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைப் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம்கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசின் நிதி நிர்வாகத்தை மிகக் கடுமையாகதலைமை நீதிபதி விமர்சித்துள்ளார். நீதிமன்றங்களின் செயல்பாடுகளுக்கு போதுமான நிதியைதமிழக அரசு சரிவர ஒதுக்காவிட்டால் தமிழகத்தில் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகஅறிவிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தமிழக அரசுக்கு பெருத்த அவமானமாகும். தமிழக அரசின் நிதி நிர்வாகம் அந்தளவுக்கு சீர்கேடுஅடைந்துள்ளதையே இது காட்டுகிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பல மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்துவதை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது விதிமுறையைமீறி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்செய்துள்ளதாகக் கூறியுள்ள தேர்தல் ஆணையம் தேர்தலையும் நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.அப்போது தான் ஏதாவது நல்ல பலன் கிடைத்திருக்கும் என்றார் ப.சிதம்பரம்.
-->