ஜெ. இன்று தர்மபுரி வருகை: கறுப்புக் கொடி காட்ட கம்யூனிஸ்ட் முடிவு
தர்மபுரி:
பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் துவக்கி வைப்பதற்காக ஜெயலலிதா இன்று தர்மபுரிக்கு வருகிறார்.ஆனால் அவருக்கு கறுப்புக் கொடி காட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கடந்த 6ம் தேதியிலிருந்து தொடர்ந்து மாவட்டம் மாவட்டமாக அரசு விழாக்களில் கலந்து கொண்டஜெயலலிதா இன்று தர்மபுரி மாவட்ட விழாவில் கலந்து கொள்கிறார்.
திருச்சியில் தங்கியுள்ள ஜெயலலிதா இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் கிளம்பி தர்மபுரி வந்து சேர்கிறார்.
பின்னர் அங்கு நடக்கும் அரசு விழாவில் ரூ.106.3 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளைத்துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத் திட்ட உதவிகளையும்மக்களுக்கு வழங்க உள்ளார்.
இதற்கிடையே முதல்வரின் வருகையையொட்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் கறுப்புக் கொடி காட்டதீர்மானித்துள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றவும் அவை முடிவு செய்துள்ளன.
மேலும் தர்மபுரியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் கருதப்படுவதால் ஜெயலலிதாவருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
-->