தவறான மருந்தால் குழந்தை சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தவறான மருந்து கொடுக்கப்பட்டதால் பிறந்து 42 நாட்களே ஆன குழந்தை இறந்துள்ளது.

சென்னை-ஆவடியைச் சேர்ந்த தனசேகர்-சுகந்தி தம்பதியர் தங்களுடைய 2வது குழந்தையானரோகேஷ் சக்திக்கு போலீயோ தடுப்பு மருந்து கொடுப்பதற்காக எம்.டி.எச். சாலையில் உள்ளதனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு ரோகேஷுக்கு மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவன் பரிதாபமாக இறந்துவிட்டான். கெட்டுப் போன மருந்து அல்லது தவறான மருந்து கொடுக்கப்பட்டதாலேயே அவன்இறந்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாகப் போலீஸில்புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களைத் தாக்க முயன்றனர்.

இதற்கிடையே போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர். இது தொடர்பாகபோலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறான மருந்து காரணமாக இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+