சிலிக்கான் வேலி அகாடெமிக்கு 2 இந்தியர்கள் தேர்வு
சிலிக்கான் வேலி:
அமெரிக்காவின் புகழ்பெற்ற சிலிக்கான் வேலியில் உள்ள "ஹால் ஆப் பேம்" (Silicon ValleyEngineering Hall of Fame) அகாடெமிக்கு 2 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான தொழில் நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்கள் இந்தஅகாடெமிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில் முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு இந்தியத் தொழில்அதிபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
புரோக்கேட் கம்யூனிகேசன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் குமார் மாலவல்லி மற்றும் ஆஸிஸ்ட்டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மிஹிர் பாரிக் ஆகியோர்தான் "ஹால் ஆப் பேம்"முக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பைபர் சேனல் டெக்னாலஜியில் அமெரிக்காவின் பல காப்புரிமைகளை மாலவல்லி பெற்றுள்ளார்.கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் துறையில் இவர் கொடிகட்டிப் பறக்கிறார். அமெரிக்க தர நிர்ணய
நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ள மாலவல்லி, பைபர் சேனல் தொழில் சங்கங்களின்இயக்குநராகவும் இருந்துள்ளார்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் என்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளபாரிக், செமி-கண்டக்டர் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். புகழ்பெற்றஹெவ்லெட்-பேக்கார்டு நிறுவனத்தில் பணியாற்றியுள்ள பாரிக் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications