நேர்மையான ஆட்டோ டிரைவருக்கு ரூ.2000 பரிசு!
சென்னை:
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட பணம், பாஸ்போர்ட்உள்ளிட்டவை அடங்கிய பையை நேர்மையான ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்னை எழும்பூர்காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆட்டோ டிரைவர் ஜனார்த்தனத்தில் ஆட்டோவில் அமெரிக்க பெண் ஒருவர் ஏறினார். எழும்பூர்அருகே ஒரு இடத்தில் இறங்கிக் சென்றார். அவர் போன பிறகுதான் இருக்கையில் அவரது கைப்பைகிடந்தது தெரியவந்தது.
உடனே அந்தப் பையுடன் எழும்பூர் காவல்நிலையம் சென்ற ஜனார்த்தனன் அதை போலீசாரிடம்ஒப்படைத்தார். அந்தப் பையில் ரூ.12,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், பாஸ்போர்ட்,டிராவலர்ஸ் செக்குகள் ஆகியவை இருந்தன.
பின்னர் அந்தக் கைப்பையின் சொந்தக்காரரான தியோபராரெஸ்ஸை போலீசார் கண்டுபிடித்து அதைஒப்படைத்தனர்.
ஜனார்த்தனனின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு சென்னை மாநகர போலீஸ் ரூ.2000 பரிசும்நற்சான்றிதழும் வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications