For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி ரயில் நிலையத்தில் கிடந்த 6 வெடிகுண்டுகள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மும்பை ரயிலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில் டெல்லி ரயில் நிலையத்தில் 6வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மும்பையில் முனுந்த் புறநகர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கரமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் நான்கு பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து டெல்லி உள்பட நாடு முழுவதிலும் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்களில்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு டெல்லி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில்அநாதையாகக் கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையை கீர்த்தி ராம் என்ற பயணிதான் முதலில் பார்த்தார்.அவர் உடனடியாகப் போலீசாரிடம் தகவலைத் தெரிவித்தார். அப்போது அங்கு ஏராளமான மக்கள்கூடியிருந்தனர்.

போலீசாரும் விரைந்து வந்து அந்த பிளாஸ்டிக் பையைச் சோதித்தபோதுதான் அதில் ஆறுவெடிகுண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். ஆனால் அதில் "டைமர்" எதுவும்இணைக்கப்பட்டிருக்கவில்லை. அதிக வெப்பம் இருந்தாலே போதும், இந்த குண்டுகள் வெடித்துவிடும்.

இவை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் குண்டு வெடிப்பு சம்பவம்தவிர்க்கப்பட்டுள்ளது. ஆறு வெடிகுண்டுகளையும் பத்திரமாக அப்புறப்படுத்திய வெடிகுண்டுநிபுணர்கள் பின்னர் அவற்றை செயலிழக்கவும் செய்தனர்.

இதையடுத்து டெல்லியைச் சுற்றிலும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் போலீசார் அங்குலம்அங்குலமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே வெடிகுண்டைக் கண்டுபிடிக்க உதவிய கீர்த்தி ராமுக்கு போலீசார் ரூ.500 பணத்தைபரிசாக வழங்கினர். அவருக்கு மேலும் சில விருதுகள் தரவும் பரிந்துரைக்கப்படும் என்று ரயில்வேபோலீஸ் கமிஷனர் கும்மான் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X