காதை செவிடாக்கும் மைக் செட் பிரார்த்தனை தேவையா?: நீதிமன்றம்
சென்னை:
மத வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளின்போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில்ஒலிபெருக்கிகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னை-மாதவரத்தைச் சேர்ந்த "சர்ச் ஆப் காட் (புல்காஸ்பல்)" என்ற கிறிஸ்தவ அமைப்பு தனதுதேவாலயத்திற்கு அருகே பிரார்த்தனைக் கூடம் கட்ட அனுமதி கோரி மாதவரம் நகராட்சியில் மனுசெய்திருந்தது. ஆனால் அந்த மனுவை நகராட்சி நிர்வாகம் நிராகரித்து விட்டது.
இதை எதிர்த்து "சர்ச் ஆப் காட்" அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சிவசுப்ரமணியம், மனுவை நிராகரித்தது தவறு என்றுகூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இருப்பினும், மத வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை, வழிபாடு என்ற பெயரில் இரைச்சல்மட்டுமே அதிகம் உள்ளது.
எந்த மதமாக இருந்தாலும் கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.ஒலிபெருக்கிகளை வைத்து, அதிக சப்தம் போட்டு, காதை செவிடாக்கித்தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அவசியமில்லை.
அதிக சப்தத்தின் மூலம் வயதானவர்கள், உடல் நிலை பாதித்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
கல்யாண மண்டபங்களும் கூட இப்போது அதிக சப்தத்தை எழுப்பி வருகின்றன. இசையும்,பிரார்த்தனைகளும் மக்களை பயமுறுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது.
விலங்குகள்தான் கத்திக் கொண்டிருக்கும். மனிதர்களாகிய நாம் ஏன் விலங்குகள் அளவுக்கு நம்மைநாமே தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதை மனுதாரரும், மற்ற மதத்தில் உள்ளவர்களும்யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் நீதிபதி சிவசுப்பிரமணியம்.
ஒலி மாசுபடுவது தவிர்க்கப்படும் என்ற உறுதிமொழியை மனுதாரர் நிறைவேற்றிய பிறகேபிரார்த்தனைக் கூடம் கட்ட அனுமதி தருவது குறித்து நகராட்சி நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டும்என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்னர் இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-->












Click it and Unblock the Notifications