போலீசாரின் குறைகளைக் கேட்ட டி.ஜி.பி.
சென்னை:
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைகேட்பு நிகழ்ச்சியில் 1,200 போலீஸார்தங்களது குறைகளைக் கூறி மனுக் கொடுத்தனர்.
3 மாதத்திற்கு ஒருமுறை உயர் காவல்துறை அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ள காவலர்களின்குறைகளைக் கேட்டு களை வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் டிஜிபியாக இருந்த நெயில்வால் போலீஸாரின்குறைகளைக் கேட்டார். அதில் ஏகக் குளறுபடிகள் நடந்தன.
அதற்குப் பிறகு தற்போது டிஜிபி ராஜகோபாலன் போலீஸ் குறையைக் கேட்டார். டிஜிபிஅலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 700 காவலர்கள்நேரில் வந்து குறைகளைக் கூறினார்.
மேலதிகாரிகளின் இடையூறு, இடமாற்றம் உள்ளிட்ட புகார்கள் தான் அதிகம் இருந்தன. 500 பேர்தங்களது குறைகளை, தங்கள் குடும்பப் பிரதிநிதிகள் மூலம் கொடுத்தனர்.
போலீஸாரின் குறைகள் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்பட்டு உடனடுக்குடன் நடவடிககைஎடுக்கப்படும் என்று டிஜிபி ராஜகோபாலன் கூறினார்.
-->












Click it and Unblock the Notifications