For Daily Alerts
Just In
ஊட்டி அருவியில் விழுந்து 2 அண்ணா. பல்கலை மாணவர்கள் பலி
ஊட்டி:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் ஊட்டி அருகே உள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் விழுந்து பலியானார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஜி படித்து வரும் மாணவர்கள் கல்வி சுற்றுப்பயணமாக ஊட்டி சென்றிருந்தனர். குளிப்பதற்காக பைகாரா நீர் வீழ்ச்சிக்கு சென்றனர்.
அப்போது வினோத்குமார், அஜய் கிருஷ்ணன் ஆகிய இருமாணவர்கள் கால்தடுமாறி அருவியில்விழுந்தனர். காட்டு வெள்ளமாய் வந்து கொண்டிருந்த நீரில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதில் வினோத்குமாரை உடனிருந்த மாணவர்கள் மீட்டனர்ய ஆனால், அவர் பலத்தகாயமடைந்திருந்தார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்,வழியிலேயே இறந்தார்.
நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அஜய் கிருஷ்ணனின் உடலை தீயணைப்புப் படை வீரர்கள் வெகுதூரத்தில் ஒரு பகுதியில் மீட்டனர்.
-->
Story first published: Saturday, March 15, 2003, 5:30 [IST]