வளைகுடா இந்தியர்களை காக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்
சென்னை:
போர் அபாயத்தின் பிடியில் சிக்கியுள்ள ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தங்கள் ரத்தத்தைவியர்வையாகக் கொட்டி உழைக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும்மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளரானவைகோ கடிதம் எழுதியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ அங்கிருந்தவாறேவாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில்,
உலகில் உள்ள மொத்த மனித சமுதாயத்தையே அழிக்கும் தன்மை வாய்ந்த ஆயுதங்களைவைத்துள்ள அமெரிக்கா, மற்ற நாடுகள் ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று கூறுவது வெட்கக்கேடான விசித்திரம்.
ஈராக்கில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில்பெரும்பாலான குழந்தைகள் சத்தான உணவு கிடைக்காமலேயே இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுரையைக் கூட மதிக்காமல் ஈராக் மீது போர்தொடுத்தே தீருவது என அமெரிக்கா கூறி வருகிறது. அவ்வாறு போர் தொடுக்கப்பட்டால் அதுஐ.நா. மீது விழுந்த மரண அடியாகும். இந்தப் போர் கொடூரமான அழிவுக்கு வழி வகுக்கும்.
போர் ஏற்படுமானால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும்ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான முன்ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியம்.
வளைகுடா நாடுகளில் தங்கள் ரத்தத்தை வியர்வையாகக் கொட்டி உழைக்கும் இந்தியர்களைப்பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
உலக சமாதானத்துக்குத் தன்னை அர்ப்பணித்துள்ள நாடு நம் இந்தியா. இப்போது நாம் விரக்தியில்கை வீச வேண்டிய அவசியம் இல்லை. உலக அமைதிக்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றுஅந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
-->