3 த.மா.கா.கா. எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைந்தனர்
சென்னை:
தமிழ் மாநில காமராஜ் காங்கிரஸ் தலைவர் குமாரதாஸ் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் இன்றுஅதிமுகவில் இணைந்தனர்.
காங்கிரஸ் கட்சியுடன் தமாகா இணையும்போது நாங்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டோம் என்றுகூறி குமாரதாஸ் தலைமையிலான 5 தமாகா எம்.எல்.ஏக்கள் தனியாகச் செயல்பட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இந்த அணியில் இருந்த சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏவான மணி நாடார் கடந்த நவம்பரில்இறந்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் தமாகாகா கட்சி தொடங்கப்பட்டது. அதில் மற்ற நான்கு எம்.எல்.ஏக்களும் நீடித்துவந்தனர். அதிமுகவின் பலத்த ஆதரவோடுதான் இந்தக் கட்சி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இவர்களில் மூன்று பேர் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர். குமாரதாஸ், ஈஸ்வரன் மற்றும்ஹக்கீம் ஆகிய மூவரும் இன்று அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா தலைமையில்அக்கட்சியில் இணைந்தனர்.
இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் இணைந்ததைத் தொடர்ந்து சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை140ஆக உயர்ந்துள்ளது.
மற்றொரு எம்.எல்.ஏவான தமிழரசன் தமாகாவின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டுத்தான் கடந்த தேர்தலில்வெற்றி பெற்றார். அவர் இன்னும் அதிமுகவில் இணைவது குறித்து முடிவு எடுக்கவில்லை.
-->












Click it and Unblock the Notifications