For Daily Alerts
Just In
27ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
பத்தாவது வகுப்புத் தேர்வுகள் வரும் 27ம் தேதி தொடங்குகின்றன.
அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ல் தொடங்கிஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கால அட்டவணை:
27.03.2003 - தமிழ் முதல் தாள்
28.03.2003 - தமிழ் 2ஆம் தாள்
31.03.2003 - ஆங்கிலம் முதல் தாள்
01.04.2003 - ஆங்கிலம் 2ஆம் தாள்
03.04.2003 - கணிதம்
07.04.2003 - அறிவியல்
08.04.2003 - சமூக அறிவியல்
அனைத்துத் தேர்வுகளும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள்துறை கூறியுள்ளது.
-->
Comments
Story first published: Thursday, March 20, 2003, 5:30 [IST]