அடுத்த ஆட்சி 3வது அணி ஆட்சிதான்: ப.சி.
கடலூர்:
திமுக, அதிமுக அல்லாத பிற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையில் திரண்டு 3வது அணி அமைத்தால்அந்த அணிக்கே அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைபொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கடலூரில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத கட்சியே ஆட்சிக்கு வரவேண்டும். காங்கிரஸ் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து 3வது அணி அமைத்துப்போட்டியிட்டால் மட்டுமே அதற்கு வாய்ப்புள்ளது.
ஆனால் இந்த அணி அமைந்தால் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி அமைவது எளிதான காரியம்தான்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. உடனடியாக அந்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இது தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்களில் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் பங்கேற்கும்.
புது வீராணம் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கை விவரங்களை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாதாக்கல் செய்ய வேண்டும் என்றார் சிதம்பரம்.
-->












Click it and Unblock the Notifications