கோவையில் விரைவில் சாப்ட்வேர் பார்க்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
சென்னையில் உள்ள டைடல் சாப்ட்வேர் பூங்காவைப் போல கோயம்புத்தூரில் தகவல் தொழில் நுட்பப் பூங்காஅமைக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
கோயம்புத்தூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதற்கு மத்தியதகவல் தொழில்நுட்பத் துறை உதவும்.
திமுகவுடன் பா.ஜ.கவுக்கு நல்ல உறவு உள்ளது. சில கருத்து வேறுபாடுகளும் உள்ளன. ஆனால் விரிசல் ஏதும்இல்லை. இந்தக் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலிலும் நீடிக்கும்.
நாடாளுமன்த்திற்கு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் தனித்து வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றார் திருநாவுக்கரசர்.
-->












Click it and Unblock the Notifications