அதிமுக ஆட்சிக்கு வர யார் காரணம்?- பாமகவுக்கு ஜெ. சூடு
சென்னை:
கடந்த 2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் பெற்றவெற்றிக்கு அதிமுகவே காரணம். கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த ஓட்டுக்கள் அதிமுகவுக்காகமக்கள் செலுத்திய வாக்குகள் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பாமக உறுப்பினர் மணி பேசுகையில், "அதிமுக இப்போது ஆட்சியில் இருப்பதற்குகடந்த சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணியில் இருந்த பாமக, தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள்தான்காரணம் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு ஜெயலலிதா பேசுகையில்,
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் இந்தக் கட்சிகளுக்கு ஓட்டுக்கள் கிடைத்தன.அவையெல்லாம் அதிமுகவுக்காக மக்கள் போட்ட வாக்குகள் என்பதை மறந்து விடக் கூடாது.
இதற்கு சரியான உதாரணங்கள் அச்சிரப்பாக்கம், வாணியம்பாடி, சாத்தான்குளம் ஆகியதொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றிகள்தான்.
அங்கெல்லாம் அதிமுகவுடன் இருந்த கூட்டணிக் கட்சிகளுக்கு 2001 தேர்தலில் வெற்றி கிடைத்தது.ஆனால் சமீப காலங்களில் இங்கு நடந்த இடைத் தேர்தல்களில் யாருடைய ஆதரவும் இல்லாமல்தனித்துப் போட்டியிட்டு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது அதிமுக.
இதிலிருந்தே யாருக்கு மக்கள் ஆதரவு தந்துள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றார்ஜெயலலிதா.
-->












Click it and Unblock the Notifications