பாக்தாத் மார்க்கெட் மீது அமெரிக்கா தாக்குதல்: 18 அப்பாவிகள் பலி
பாக்தாத்:
பாக்தாத் நகரின் மத்திய மார்க்கெட் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 18 அப்பாவி மக்கள்உயிரிழந்தனர்.
அதிபர் சதாம் ஹூசேனை எதிர்த்துத் தான் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறும் அமெரிக்கப் படைகள் அப்பாவிமக்களையும் கொன்று குவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏவுகணைத் தாக்குதலில் மார்க்கெட் கட்டடம் சிதறி சின்னாபின்னாவானது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பலகார்களும் வெடித்துச் சிதறின. கட்டதத்தின் மத்தியில் இந்த ஏவுகணை புகுந்து பலத்த ஓசையுடன் வெடித்துத்சிதறியது.
இத் தாக்குதல் தவறாக நடந்துவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து விசாரணைக்கும்உத்தரவிடப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.
புரட்சி: பிரிட்டன் பல்டி
இந் நிலையில் பாஸ்ராவிலும் மேலும் பல நகர்களிலும் சதாம் ஹூசேனுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்துவருவதாகக் கூறிய பிரிட்டன் அந்தத் தகவலை திரும்பப் பெற்றுள்ளது. பாஸ்ராவில் ஈராக்கியப் படைகளுக்குஎதிராக மக்களே தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறிய பிரிட்டிஷ் படைகள், இப்போது கதையை மாற்றியுள்ளன.
புரட்சியை சதாமின் படைகள் ஆரம்பத்திலேயே ஒடுக்கிவிட்டதாக பிரிட்டன் இப்போது கூறியுள்ளது.
இந் நிலையில் ஈராக்கில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பலியான மக்களின் இறுதிச் சடங்குகளில்ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அவர்கள் அமெரிக்க- பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக கோஷங்கள்எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
-->












Click it and Unblock the Notifications