ஜெ. குறித்து அவதூறாக பேசியதாக மதிமுக பிரமுகர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கரூர்:
மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர்பழனிச்சாமி ஆகியோர் மீது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அரசு வக்கீல்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கரூர் அரசு வக்கீல் கனகராஜ் இது தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி கரூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நாஞ்சில் சம்பத்தும்,பழனிச்சாமியும் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியுள்ளனர்.
இது தொடர்பாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனகராஜ் தன் மனுவில்குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பத் மற்றும் பழனிச்சாமிக்குநீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications