சென்னையில் ரூ.33 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது
சென்னை:
சென்னையில் ரூ.33.50 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை-செளகார்ப்பேட்டை பகுதியில் உள்ள காசிச் செட்டித் தெருவில் பேனா விற்பனைக் கடைவைத்திருப்பவர் செபாஸ்டியன். இவரது கடையில் ஹவாலா பணம் புழங்குவதாக மத்தியஅமலாக்கப் பிரிவினருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது பேனாக்கள் அடுக்கி வைக்கப் பயன்படுத்தப்படும் அட்டைப் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.33.50 லட்சம் பணம் அதில் இருந்தது.
இந்தப் பணம் ஹவாலா முறையில் துபாயிலிருந்து சென்னை வழியாக கேரளாவுக்குக்கடத்தப்படவிருந்தது. இது தொடர்பாக செபாஸ்டியன் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சென்னை மற்றும் சேலத்தில் நடந்த சோதனைகளில் மொத்தம்ரூ.2 கோடி அளவுக்கு ஹவாலா பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிடிபட்டுள்ள பணத்திற்கும் கடந்த முறை சிக்கிய கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications