போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை: ஈராக், அமெரிக்கா அறிவிப்பு
பெய்ரூட்:
போர் நிறுத்தத்துக்கோ அல்லது எந்தவிதமான சமாதான உடன்படிக்கைகோ ஈராக் முன் வராது என அந் நாட்டுத்துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ் திட்டவட்டமாகக் கூறினார்.
ஈராக்குடன் சமாதான உடன்படிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.ஆனால், இதை அமெரிக்காவும் ஈராக்கும் மறுத்துள்ளன.
லெபனான் நாட்டுத் தனியார் தொலைக்காட்சியான எல்.பி.சி.ஐ. டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தப் போர்முடிவுக்கு வர வேண்டுமானால் ஈராக்கை விட்டு அமெரிக்கப் படைகள் நிபந்தனையின்றி வெளியேற வேண்டும்.1991ம் ஆண்டு முதல் ஈராக் மீது விதிக்கப்பட்ட தடைகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
எங்கள் நாட்டுக்குள் ஊடுருவிய இந்தக் கும்பலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யவோ, அல்லது சமாதானஉடன்படிக்கை செய்யவோ நாங்கள் தயாராக இல்லை.
அமெரிக்கா மறுப்பு:
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுயிைல்,
ஈராக்குடன் சமாதானம் பேச வேண்டிய அவசியமோ திட்டமோ எங்களிடம் இல்லை. சதாம் ஹூசேன்நிபந்தனையில்லாமல் சரணடைந்தால் மட்டுமே போரை நிறுத்துவோம். போரின் முடிவில் சதாமின் ஆட்சிஒழிக்கப்படும்.
சமாதான உடன்படிக்கை, பேச்சுவார்த்தை போன்றவை எல்லாம் சாத்தியமே இல்லை. இது போன்ற புரளிகளைஈராக் தான் பரப்பி வருகிறது. டிவியில் தோன்றுவதாகக் கூறிவிட்டு நேற்று தனது தகவல்துறை அமைச்சரைவிட்டுதனது செய்தியை டிவியில் படிக்க வைத்துள்ளார் சதாம். இதனால் சதாம் ஹூசேன் உயிரோடு இருக்கிறாராஇல்லையா என்று தெரியவில்லை என்றார்.
-->












Click it and Unblock the Notifications