குமரிக் கடலில் 20 பேருடன் பிடிபட்ட தைவான் மீன்பிடி படகு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி கடல் பகுதியில் 20 பேருடன் தைவான் மீன் பிடிப் படகு பிடிபட்டது. அவர்களிடம்கடலோரக் காவல் படை அதிகாரிகள் மற்றும் மீன்வளத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
பிடிபட்ட படகில் 10 தைவான் நாட்டினர், 9 சீனர்கள், ஒரு இந்தியர் இருந்தனர். இவர்கள்அனைவரும் மீனவர்கள்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் 40 கடல் மைல் தொலைவில் வெளிநாட்டு படகுகள் மீன் பிடித்துக்கொள்ள அனுமதியுண்டு. ஆனால் இந்த படகில் வந்தவர்கள், விசைப் படகுகள் வலை விரித்துள்ளபகுதிகளில் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதையடுத்துதான் அவர்கள் பிடிபட்டனர். பிடிபட்ட அனைவரும் கன்னியாகுமரி காவல்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 10 மாதமாக பல பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்கள் கன்னியாகுமரிக்குவந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டுக் கொண்டனர்.
இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பான உத்தரவுகள் சென்னையில் இருப்பதாகவும் அதை கன்னியாகுமரி நிர்வாகத்திடம்ஒப்படைப்பதாகவும் படகின் கேப்டன் லீனாகிங் தெரிவித்துள்ளார்.
-->