இன்சாட் செயற்கை கோளில் திடீர் கோளாறு: நாளை விண்ணில் பறக்கிறது
பெங்களூர்:
இன்று விண்ணில் செலுத்தப்பட இருந்த இந்தியாவின் இன்சாட்-3 ஏ தகவல்தொடர்பு செயற்கைக் கோள் கடைசி நேரத்தில் விண்ணில்செலுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் நாளை செயற்கைக் கோள் விண்ணில்செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக் கோளை ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸ் ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் செலுத்த இருந்தது. தென்அமெரிக்காவில் உள்ள பிரஞ்சு கயானாவின் கொரு விண்தளத்தில் இருந்து செயற்கைக் கோள் ஏவப்பட இருந்தது.
ஆனால், ராக்கெட் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன் செயற்கைக் கோளில் கோளாறு இருப்பதை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனவிஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதிலிருந்து வந்த டெலிமெட்ரி சிக்னல் தெளிவில்லாமல் இருந்தது.
இதையடுத்து ராக்கெட்டை செலுத்துவதை உடனே நிறுத்த இந்திய விஞ்ஞானிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து கடைசி நேரத்தில்ராக்கெட் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டில் இந்திய செயற்கைக் கோளுடன் அமெரிக்காவின் பனாம்சாட் என்றதொலைத் தொடர்பு செயற்கைக் கோளும் விண்ணில செலுத்தப்பட இருந்தது.
முதலில் திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்சாட்-3 ஏ விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 11ம்தேதி ஏரியன்-5 ராக்கெட் விபத்துக்குள்ளானது. விண்ணை நோக்கிக் கிளம்பிய அந்த ராக்கெட் தரையை நோக்கிப் பாய்ந்தது. இதையடுத்துஅதை வானிலேயே வெடிக்கச் செய்து தரையில் ஏற்பட இருந்த பெரும் விபத்தை விஞ்ஞானிகள் தடுத்தனர்,
இதையடுத்து ஏரியன்-5 ரக ராக்கெட்டுகள் ஏவப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது தான் அந்த ராக்கெட்டில் இருந்துகுறைபாடுகள் நீக்கப்பட்டு விண்ணில் பாயத் தயாரானது. இந் நிலையில் இன்சாட் செயற்கைக் கோளில் பிரச்சனை ஏற்பட்டதால் ராக்கெட்செலுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் நாளை இந்திய நேரப்படி அதிகாலை 4.19 மணி முதல் 5 மணிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.