For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சார்ஸ்: தாய்லாந்தில் இலங்கை அமைதி பேச்சு நடக்குமா?

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

சார்ஸ் நோய் பீதி தொடர்ந்து பரவிக் கொண்டிருந்தபோதிலும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைஅரசுக்கும் இடையிலான 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே அறிவித்தபடி தாய்லாந்தில்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இதுவரை 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துமுடிந்துள்ளன. அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் வரும் 29ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை 4 நாட்களுக்குநடைபெற உள்ளன.

இதற்கிடையே சீனாவில் தோன்றியதாகக் கருதப்படும் சார்ஸ் நோய் தற்போது உலகமெங்கும்வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 170 உயிர்களைப் பலி கொண்டுள்ள சார்ஸ் நோய் தென் கிழக்குஆசியாவில்தான் வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

சீனா, ஹாங்காங், கனடா, மலேசியா, சிங்கப்பூர் வரிசையில் தாய்லாந்து நாட்டிலும் சார்ஸ் நோய்பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகள்தாய்லாந்திலிருந்து நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவுக்கு மாற்றப்படும் எனத் தகவல்கள்வெளியாகின.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல் தாய்லாந்திலேயே 7வது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

சார்ஸ் நோய் பீதியால் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படாது என்று இலங்கைஅமைதிப் பேச்சுவார்த்தை செயலகத்தின் தலைவர் பெர்னார்டு குணதிலகே கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X