சென்னை போக்குவரத்துத்துறையில் 2 பெண் டிரைவர்கள் நியமனம்
சென்னை:
சென்னை மாநகர பஸ்களில் இரு பெண்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, நாகர்கோவிலில் இரு பெண்கள் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், சென்னையில்அரசு பஸ் டிரைவர்களாக இப்போது தான் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாவித்திரி மற்றும் சமீதா பானு ஆகிய இந்த இரு பெண் டிரைவர்களும் பணியில் நியமிக்கப்பட்டதைபோக்குவரத்து அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் அறிவித்தபோதே சில மணி நேரத்தில் இருபெண்களும் பஸ்களை இயக்க ஆரம்பித்துவிட்டனர்.
இவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் டிரைவர் வேலையில் பணிபுரிய ஆர்வம் தெரிவித்து சென்னைமாநகர போக்குவரத்துத்துறைக்கு பயோ-டேட்டாவை அனுப்பினர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்குத்தெரிவிக்கப்பட்டது.
உடனே இருவருக்கும் பயிற்சி தரவும் வேலை வாய்ப்பு தரவும் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 3மாதங்களாக இருவருக்கும் டிரைவர் பயிற்சி தரப்பட்டது.
இருவரும் தாம்பரம்- பாரிமுனை இடையிலான சென்னையின் மிக நீண்டதூர பஸ்களான் 18-ஏ ரூட் பஸ்களைஇயக்க ஆரம்பித்துள்ளனர்.
இவர்களுக்குத் துணையாக அந்த பஸ்களில் பெண் கண்டக்டர்களேநியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெண் டிரைவர்களுக்கு பெண் பயணிகள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். ஆண்களும் தங்கள்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த இருவருமே மிக ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-->