தமிழகத்தில் மேலும் 2 நீர் மின் நிலையங்கள்
சென்னை:
தமிழகத்தில் மேலும் இரு நீர் மின் நிலையங்கள் (hydro power plants) அமைக்கப்பட உள்ளன.
இப்போது மாநிலத்தின் பல்வேறு ஆறுகளின் குறுக்கே 31 நீர் மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின்நிலையங்களை நவீனப்படுத்தவும், இதில் உள்ள பழைய இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திரங்கள்பொறுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இருக்கும் நீரை வைத்தே அதிகமான மின் உற்பத்தி செய்யும் முடியும். இது தவிர காவிரி ஆற்றின்குறுக்கே ஒரு மின் நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தேசிய நீர் மின் கழகத்துடன்தமிழகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பவானி ஆற்றின் குறுக்கே இப்போது ரூ. 196 கோடி செலவில் மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இது தவிர இன்னொரு மின் நிலையம் காவிரியின் குறுக்கே அமைக்கப்பட உள்ளது.
இந்தத் தகவல்களை மின்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications