சென்னை புதிய விமான நிலைய கட்டடம்: வாஜ்பாய் இன்று திறக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு முனையக் கட்டடத்தை பிரதமர்வாஜ்பாய் இன்று திறந்து வைக்கிறார்.
இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்புவிமானம் மூலம் பெங்களூரில் இருந்து சென்னை வருகிறார் வாஜ்பாய்.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கடலோர காவல் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் விமான நிலையத்திற்கு மேலே பறந்துகண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷானவாஸ்ஹூசேன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர் பாலு உள்ளிட்டவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications